Friday, 22 January 2016

மதன காம தர்மம்-சட்டம்-விதிமுறைகள் / மனித பாலியல் சட்டம்-விதிமுறைகள்

மதன காம தர்மம்-சட்டம்-விதிமுறைகள் / மனித பாலியல் சட்டம்-விதிமுறைகள்

1.      ஒரு ஆணோ / பெண்ணோ தன் வாழ்நாளில் பாலுறவு / உடலுறவு கொண்டால், அது ஒரேயொரு ஆண் / பெண்ணிடம்தான் கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண் / பெண்ணிடம் பாலுறவு கொண்டால் அது தவறு, குற்றம், பாவம் ஆகும். மேலும் இவர்கள் தன் புனிதத்தையும் கற்பையும் இழந்ததாகக் கருதப்படுவர்.

2.      ஒரு ஆணோ / பெண்ணோ பாலுறவு / உடலுறவு கொண்டால், திருமணத்திற்குப்பின் தன் வாழ்க்கைத் துணையிடம்தான் (கணவன் / மனைவி) கொள்ள வேண்டும்.

3.      ஒரு ஆண் / பெண் திருமணத்திற்கு முன் பாலுறவு / உடலுறவு கொண்டால் அது தவறு, குற்றம், பாவம் ஆகும்.

4.      அப்படி ஒரு ஆண் / பெண் திருமணத்திற்கு முன் ஒரு ஆண் / பெண்ணிடம் பாலுறவு / உடலுறவு கொண்டுவிட்டால் அந்த ஆண் / பெண் தன் வாழ்நாளில் எப்போதும் இன்னொரு ஆண்/ பெண்ணிடம் பாலுறவு கொள்ளக்கூடாது. ஏனென்றால் திருமணத்திற்கு முன் பாலுறவு கொண்ட அந்த ஆண் / பெண்ணுக்கு இன்னொரு முறை, வேறொரு ஆண் / பெண்ணிடம் பாலுறவு கொள்ளும் தகுதி இல்லை. அதை அவர்கள் இழக்கிறார்கள். இந்த சட்டம் / விதிமுறையை மீறினால், அது தவறு, குற்றம் ஆகும். 

5.      ஒரு ஆண் / பெண் திருமணத்திற்கு முன்னே பாலுறவு / உடலுறவு கொண்டால், அது அது தவறு, குற்றம், பாவம் ஆகும். அது தான் திருமணம் செய்யப்போகும் தன் வாழ்க்கைத்  துணைக்கு செய்யும் / செய்த துரோகம் ஆகும்.

6.      திருமணமான ஒரு கணவன் / மனைவி தன் வாழ்க்கைத் துணையைத் தவிர வேறொரு ஆண் / பெண்ணிடம பாலுறவு / உடலுறவு கொண்டால் அது தவறு, குற்றம், பாவம் ஆகும். அது தன் வாழ்க்கைத்  துணைக்கு செய்யும் / செய்த துரோகம் ஆகும்.

7.      ஒரு கணவனோ / மனைவியோ தன் வாழ்க்கைத் துணையைத் தவிர வேறொரு ஆண் / பெண்ணிடம் காம நோக்கோடு நினைத்தாலோ, பார்த்தாலோ, பேசினாலோ & தொட்டாலோ அது தவறு, குற்றம், பாவம் ஆகும். இது காதலன் / காதலிக்கும் பொருந்தும்.

8.      ஒரு ஆண் / பெண் தன்னை, தன்னுடைய வாழ்க்கைத் துணை (கணவன் / மனைவி) அல்லாமல் வேறொரு ஆண் / பெண்ணை காம நோக்கத்தோடு பார்க்க, பேச & தொட அனுமதித்தாலோ அது தவறு, குற்றம், பாவம் ஆகும். மேலும் அச்செயல் தன் வாழ்க்கைத்  துணைக்கு செய்யும் / செய்த துரோகம் ஆகும். இது காதலன் / காதலிக்கும் பொருந்தும்.

9.      ஒரு ஆண் / பெண்ணின் உடல் / உடல் அங்கத்தினை ஆடையில்லாமல் முழுவதுமாக காம நோக்கத்தோடு பார்க்கவும், தொடவும் திருமணத்திற்குப்பின் தன் வாழ்க்கைத் துணைக்கு மட்டும்தான் உரிமையும் அதிகாரமும் இருக்கிறது; வேறு யாருக்கும் இல்லை. எனவே எந்த ஒரு ஆணும் / பெண்ணும் தன் உடல் / உடல் அங்கத்தினை வேறெந்த ஆண் / பெண்ணையும் காம நோக்கத்தோடு பார்க்க & தொட அனுமதிக்கக்கூடாது. அப்படி அனுமதித்தால், அது தவறு, குற்றம், பாவம் ஆகும். மேலும் அவர்கள் தன் வாழ்க்கைத் துணைக்கு துரோகம் செய்கிறவர்கள் / செய்தவர்களாகவே கருதப்படுவர். இது காதலன் / காதலிக்கும் பொருந்தும்.

10.  திருமணமாகாத ஒரு ஆண் / பெண் திருமணமான ஒரு ஆண் / பெண்ணிடம் பாலுறவு / உடலுறவு கொள்வது தவறு, குற்றம், பாவம் ஆகும். மேலும் அவர்கள் கீழ்க்கண்டவர்களுக்கு துரோகம் செய்தவர்களாகவே கருதப்படுவர்.
Ø  தனக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை (கணவன் / மனைவி).
Ø  தான் பாலுறவு / உடலுறவு கொண்ட ஆண் / பெண்ணின் வாழ்க்கைத் துணை (கணவன் / மனைவி).
Ø  தான் பாலுறவு / உடலுறவு கொண்ட ஆண் / பெண்ணின் பிள்ளைகள்.
Ø  தான் பாலுறவு / உடலுறவு கொண்ட ஆண் / பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள்.

11.  திருமணமான ஒரு ஆண் / பெண் திருமணமாகாத ஒரு ஆண் / பெண்ணிடம் பாலுறவு / உடலுறவு கொள்வது தவறு, குற்றம், பாவம் ஆகும். மேலும் அவர்கள் கீழ்க்கண்டவர்களுக்கு துரோகம் செய்தவர்களாகவே கருதப்படுவர்.
Ø  தன் வாழ்க்கைத் துணை (கணவன் / மனைவி).
Ø  தன் பிள்ளைகள்.
Ø  தன் குடும்ப உறுப்பினர்கள்
Ø  தான் பாலுறவு / உடலுறவு கொண்ட ஆண் / பெண்ணிற்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை (கணவன் / மனைவி).    
   
12.  ஒரு ஆண் / பெண் தன் ரத்த சொந்தம் / உறவினரிடம் (அக்கா, தங்கை, அம்மா, அத்தை, அண்ணி & ஆண் உறவுகள்) பாலுறவு / உடலுறவு கொள்ளக்கூடாது. அப்படி செய்தால், அது மிகப்பெரிய தவறு, குற்றம், பாவம் ஆகும்.

13.  ஒரு ஆண் / பெண் தான் பாலுறவு / உடலுறவு கொள்ளப்போகும் ஆண் / பெண்ணிற்கு அதில் சம்மதம் / விருப்பம் இருந்தால் மட்டுமே அவர்களிடம் பாலுறவு கொள்ள வேண்டும். அப்படி அவர்களுக்கு சம்மதம் / விருப்பம் இல்லாமல் அவர்களிடம் பாலுறவு கொண்டால் அது தவறு, குற்றம் ஆகும். இச்செயல் அவர்களிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாகவே கருதப்படும்.

14.  ஒரு பெண் பணத்துக்காக ஒரு ஆணிடம் பாலுறவு / உடலுறவு கொள்வது தவறு, குற்றம் ஆகும்; அப்பெண் விபச்சாரி எனப்படுவாள் மற்றும் அவள் கடுமையான தண்டனைக்குரியவள் ஆவாள். 

15.  ஒரு ஆண் / பெண் பதினெட்டு (18) அடையாத ஒரு ஆண் / பெண்ணிடம் பாலுறவு / உடலுறவு கொள்ளக்கூடாது. அப்படி செய்தால் அது தவறு, குற்றம் ஆகும்.

No comments:

Post a Comment